search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது.
      • நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

      தென்காசி:

      தமிழக பா.ஜனதாவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலா ளராக இருந்து வரும் எம்.சி. மருதுபாண்டியன் மதுரை கோட்டை ரெயில்வே மேலாளரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      ரெயில்வேயில் தண்ட வாளங்களை அகலப்படுத்து வதற்கு முன் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய பழைய பாரம்பரிய ரெயில்களை மீட்டெடுக்கும் வண்ணம் பல்வேறு புதிய வசதிகளுடன் ரெயில்களை இயக்க வேண்டும்.

      5 ஜோடி பகல் ரெயில் களும், 2 ஜோடி இரவு ரெயில்களும் மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 2001-ம் ஆண்டு செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்க ப்பட்டன. ரெயில்வேயில் அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-ல் அகலப்பாதை முடிந்த பிறகும் ஒரு பகல் ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

      செங்கோட்டை-கொ ல்லம் பகுதியின் வழக்க மான பயணிகளுக்கு வசதி யாக இப்போது முழு முன்பதிவு இல்லாத ரெயி ல்கள் இல்லை. நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு நேரடியாக இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள அனைத்து ரெயி ல்களையும் விரைவில் இயக்கு வதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டை-கொல்லத்தின் பழமையான முதல் திருவாங்கூர் ரெயில் பாதை 1904-ல் திறக்கப்பட்ட பாரம்பரியத்தை பறைசாற்ற உதவும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

      அப்போது பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ்ஆசாத் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.   

      • 8 கிலோமீட்டர் நடை பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
      • நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடை பயிற்சியை மேற்கொண்டனர்.

      தென்காசி:

      தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் நகர் பகுதியில் தொடங்கி காசிமேஜபுரம், இலஞ்சி குமாரசாமி கோவில் சுற்றுப்பாதை வழியாக 8 கிலோமீட்டர் நடை பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பழனி நாடார், ராஜா மற்றும் மருத்துவ துறையின் இணை இயக்குனர் முரளிசங்கர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர், அரசு வக்கீல் வேலுச்சாமி, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா, மேலகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் சுடலை, பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், இலஞ்சி பேரூர் தி.மு.க. செயலாளர் முத்தையா, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜோதிடர் மாடசாமி, நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர துணைத் தலைவர்கள் சித்திக், தேவராஜன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், தென்காசி ராமராஜ், கு.மூர்த்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

      • நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
      • முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார்.

      கடையம்:

      கடையம் அருகே உள்ள மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இடங்களில் கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை தங்கராஜன் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை அமிர்த சிபியா, கடையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பள்ளி நிர்வாகி அருள் அந்தோணி மிக்கேல் தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மற்றும் ஊராட்சி செயலர் பாரத், லட்சுமியூர் ரவி, வார்டு உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார். விழாவினை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்.

      • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
      • கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது.

      இதையொட்டி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் சங்கரன் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.

      இதில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய வட்டங்களில் பணி புரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.எஸ்.பி. பால்சுதர் பேசியதாவது:-

      தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வருவாய்த் துறை, நில அளவை துறை, மின்வாரியத்துறை ஆகிய துறைகளின் மீது லஞ்ச புகார் தெரிவித்து அதிகமான போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளது.

      என்னுடைய தனிப்பட்ட என்னை கண்டுபிடித்து புகார் கூறுகின்றனர்.அதனால் தான் சங்கரன் கோவிலில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் 100 பேரில் 5 பேராவது மாறுவார்கள் என்கிற நோக்கம் மட்டும்தான் காரணம்.

      நீங்கள் பார்க்கிற துறையில் பல பிரச்சினைகள் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு நாம் சரியாக இருந்தால் போதும். முடியாது என்று சொன்னால் இடமாற்றம் செய்வார்கள். வேறு இடத்தில் போய் பணி செய்யுங்கள் அவ்வளவு தான்.

      அதற்காக வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஏறி அலைய வேண்டுமா? உங்கள் குடும்பத்தை எண்ணி பாருங்கள்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பால் சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ் பெக்டர் ரவி, தலைமை காவலர்கள் வேணுகோபால், கணேசன் ஆகியோர் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் டிரை வர்களிடம் 'லஞ்சம் கொடுப் பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

      • ராஜா எம்.எல்.ஏ. ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
      • நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பனவடலி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ், கூட்டுறவு சங்க தனி அலுவலர் செல்வகணேஷ் மற்றும் சுரேஷ் பனவடலிசத்திரம் கூட்டுறவு சங்க செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன், ஆசிரியர் சாமியா, ராசா, வெளியப்பன், கருப்பசாமி, ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
      • பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சி பூவனூர் கிராமத்தின் பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

      தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பழுதானதால் கனமழையின் காரணமாக பள்ளங்கள் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே பூவனூர் கிராமத்திற்கு யார் வந்தாலும், கிராமத்தில் இருந்து வெளியே யார் சென்றாலும் குளம் போல் தேங்கிய மழை நீரின் வழியே செல்ல வேண்டி உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

      மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் இருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

      இந்நிலையில் தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அப்போது அவர்களின் உடை மற்றும் பாட புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட திப்பணம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய சாலை அமைக்கப்படுமா என கேட்டதற்கு ஏற்கனவே 2 முறை தீர்மானம் வைத்து அனுப்பி உள்ளோம்.

      இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

      • ராம கிருஷ்ணன் தனது காரில் கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
      • எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் தனது காரில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டி ருந்தார்.

      அப்போது நெல்லையை சேர்ந்த ஒருவர் தென்காசி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காருக்குள் இருந்தவர்களை மீட்க சென்றனர் .

      அப்போது 2 கார்களிலும் டிரைவர்கள் மட்டும் இருந்தனர். மேலும், கார்க ளில் உள்ள ஏர்பேக் விரிவடைந்து செயல்பட்டதால் எவ்வித காயங்களும் இன்றி 2 டிரைவர்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

      இருப்பினும் 2 கார்களி லும் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார்கள் நேருக்கு நேர் மோதிய சி.சி.டி.வி. காட்சியும் வெளியாகி உள்ளது.

      • தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      சிவகிரி அருகே தென்மலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.98 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சுப்ரமணியாபுரம் முதல் தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர் குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவராணி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர்கள் குருசாமி, ராஜகோபால், கிரகதுரை, குருசாமி, கருப்பையா, உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதி தெருக்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.
      • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

      கடையநல்லூர்:

      கடையநல்லூர் ரஹ்மானியபுரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து முகமூடிக் கொள்ளையர்களால் தொடர் திருட்டு நடைபெற்றது. இந்த குற்றசம்பங்களை கட்டுப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் காமிராக்களை பொருத்தவும், கடையநல்லூர் காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.

      இந்நிலையில் ரஹ்மானியாபுரம் மேற்குப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தக்வா ஐக்கிய கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் சார்பில் பொதுமக்களின் உதவியுடன் ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதியில் பல்வேறு தெருக்களில் 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.

      கண்காணிப்பு காமிராக்கள் பயன்பாட்டிற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார், துணைத் தலைவர் யூசுப், செயலாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர் செய்யது அலி, பொருளாளளர் செய்யது முஹம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

      நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, ஹைதர் அலி, யாஸர் கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அப்துல் மஜீத், மைதீன்அப்துல் மஜீத், திவான் மைதீன், நத்தகர் பாதுஷா மற்றும் போலீசார், பொதுமக்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

      • முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
      • முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

      மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

      மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.

      தகுதியான குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், காது கேட்கும் கருவி, ஸ்மார்ட் கார்ட், ரெயில் பாஸ், பஸ் பாஸ், மாதாந்திர உதவி தொகை, பெற்றோர்களுக்கு தையல் எந்திரம், வீல் சேர், கேலிபர், ட்ரை சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு தகுதியான குழந்தைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டனர்.

      இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

      • இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
      • இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-

      தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் 75 பேருக்கு மட்டுமே மானியத்துடன் கூடிய கடனுதவி என்ப தனை இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

      இத்திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம் வரையிலான வியாபாரம் சார்ந்த தொழில்கள் புதியதாக தொடங்க 25 சதவீதம் தமிழக அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரி வினர் 45 வயது வரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 55 வயது வரையிலும் விண்ணப்பி க்கலாம்.

      மேலும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்களை திட்டங்களை 25 சதவீத மானியத்துடன் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க ஏதுவாக புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டமும் தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

      இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன் பெற குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டயபடிப்பு அல்லது தொழிற் கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.இந்த 2 திட்டங்களில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp மற்றும் www.msmeonline.tn.gov.in/ needs என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

      வியாபாரம் செய்பவர்க ளுக்கு அரிய வாய்ப்பாக நாளை (வியாழக்கிழமை) மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இலவசமாக கடன் விண்ணப்பங்கள் பதிவு செய்து அன்றைய தினமே நேர்காணலும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஒருநாள் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விலைப்புள்ளி ஆகியவற்றை 2 நகல்களும் மற்றும் அசலினை சரிபார்ப்பதற்காக எடுத்து வர வேண்டும். மாவட்ட தொழில் மையத்தில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான விபரங்களுக்கு 8778074528 மற்றும் 9790444577 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 5/5(2), 5/5(3) திருமலைக்கோவில் ரோடு, குத்துக்கல்வலசை, தென்காசி -627803 என்ற முகவரியிலோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.

      புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் இந்த திட்டங்களில் விண்ணப்பித்து மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று புதிய தாக தொழில் தொடங்கி தங்க ளின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
      • பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பாக பொதிகை சதுரங்க கோப்பை மாநில சதுரங்க போட்டி தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

      நெல்லை வீரர் முதலிடம்

      போட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பொது பிரிவு மற்றும் 9, 11, 13, 17 ஆகிய வயது பிரிவுகளில் தனித்தனியாக 6 சுற்றுகள் நடைபெற்றது.

      போட்டியை எம்.கே.வி.கே. பள்ளி தாளாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ஜீவக்குமார் தலைமையில் தேனி சையது மைதீன், மேனகா, சதீஷ்குமார், ராஜாகாந்தன், வைதேகி, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடுவர் குழுவாக செயல்பட்டனர். நெல்லை மாவட்ட வீரர் ஸ்கேனி முதலிடம் பெற்று பொதிகை கோப்பை சாம்பியன் பரிசை வென்றார். தென்காசி மாவட்ட வீரர்கள் சபின், விஷால், ரித்திக் ரக்சன், ஷாம் ஜெப்ரி, மதுரை மாவட்ட வீரர் பாலன் வைரவன் ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.

      பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசுடன் சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாண வர்கள் பிரிவில் பிரித்வி, ஹரிஷ் லிங்கம், அஸ்வத், முகமது அசில், மாணவிகள் பிரிவில் பிரதிக்ஷா, ராஜ லட்சுமி, யாமினா, தார ணிகாஸ்ரீ ஆகியோர் அவ ர்கள் வயது பிரிவில் முத லிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தட்சண மாற நாடார் சங்க தலை வரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆர்.கே. காளி தாசன் பரிசுகள் வழங்கினார்.

      கலந்து கொண்டவர்கள்

      விழாவில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் அழகேசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியன், குல சேகரபட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணி வண்ணன், தென்காசி மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், நெல்லை நகர சதுரங்க கழக செய லாளர் கருணாகரன், சதுரங்க கழக ஆர்வலர்கள் கமலக்கண்ணன், அருணா ச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சதுரங்க கழக இயக்குனர் எஸ்.கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

      ×