என் மலர்tooltip icon

    கனடா

    • சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக ஜஸ்டின் ட்ரூடோராஜினாமா செய்ததாக தகவல்
    • அக்டோபரின் பிற்பகுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் 9 ஆண்டுகளாக வகித்து வரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    • எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தெரியாது.
    • 2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார்.

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தி குளோப் மற்றும் மெயில் தங்களுக்கு கிடைத்த தகவல்களில் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், எங்களிடம் பேசிய படி ஜஸ்டின் ட்ரூடோ எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை. ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

    2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார். அப்போது கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தபோது முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

    ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போயகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    • விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.
    • செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.

    ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

    பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் ஏர் கனடா 2259 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் இன்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்தது.

     

    தரையிறங்கும் கியர் செயலிழந்ததைத் தொடர்ந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், விமானத்தின் இறக்கைகள் ஓடுபாதை மேற்பரப்புடன் உரசுவதை காட்டுகிறது. இதன் விளைவாக எஞ்சின் பகுதி தீப்பற்றியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அதிஷ்டவசமாக பயணிகள் அல்லது பணியாளர்களிடையே எந்த உயிரிழப்பும், காயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகம

    இந்த விபத்து நடப்பதற்கு சில சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவின் முவான் நகரில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கிய பின் வெடித்தது. இந்த விபத்தில் 127 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. 

    • நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது.
    • நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

    ஒட்டாவா:

    கனடாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றியும், மேற்படிப்பு படித்தும் வருகிறார்கள். அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. இதில் அதிகளவில் இந்தியர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

    எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடா குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

    கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 முதல் 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது.


    இந்த நிலையில் கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போலி உத்தரவு கடி தங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்த உத்தரவால் கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    இதுகுறித்து கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, `நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், மோசடியைக் குறைப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    கனடாவின் வெற்றிக்கு குடியேற்றம் எப்போதுமே ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது. கனடாவிற்கு சிறந்த மற்றும் பிரகாசமானவற்றை வரவேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இதன் மூலம் அனைவருக்கும் தரமான வேலைகள், வீடுகள் மற்றும் அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவைப் பெறலாம்' என்றார்.

    • பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.
    • முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.

    துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என இரு பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு எதிரான கருத்து வேறுபாட்டை முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    சமீபத்தில் கனடாவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்களை காசோலையாக வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக பிரதமர் ட்ரூடோ மற்றும் துணை பிரதமராக இருந்த கிறிஸ்டியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நீண்ட காலமாக ட்ரூடோவின் லிபரல் கட்சியில் மிக முக்கிய தலைவராக இருந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் நிதியமைச்சராகவும் கிறிஸ்டியா பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில், துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா கனடாவின் நிதி வருவாயை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தி இருக்கிறார்.

    தனது ராஜினாமா கடிதத்தில் டிரம்ப்-இன் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கிறிஸ்டியா குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டியா தொடர்ந்து லிபரல் உறுப்பினராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இருக்க வரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரவருக்கும் கனடா தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இறக்குமதி செய்யப்படும் கனடா நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இது கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து அதனிடம் இருந்து தனது மனைவியை மீட்க போராடினார்.
    • காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கனடாவின் போர்ட் செவன் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் வளர்ப்பு நாய்களை தேடி வீட்டின் வெளியே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு பனிக்கரடி பெண் மீது பாய்ந்து தாக்கி உள்ளது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து அதனிடம் இருந்து தனது மனைவியை மீட்க போராடினார். அப்போது கரடி அவரை கடித்து காயப்படுத்தியது. இதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடவும், கரடி அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியது. காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப் செய்து கின்னஸ் சாதனை.
    • டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

    சாதனை படைக்க வயது தடையல்ல என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.


    ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அவர் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாகவே செய்து தனது சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.


    இதுகுறித்து அவர் கூறுகையில், `நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கூறுகையில், எங்களின் பாட்டி மிகவும் அற்புதமானவர் என்றனர்.

    • இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 இந்தியர்களை கனடா அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடாவில் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகள் வெளியாகின.

    இதனை தொடர்ந்து நிஜ்ஜாரின் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. மேலும் அந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிராகரித்தது.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில், கனடாவை சேர்ந்த நாளிதழ் ஒன்று நிஜ்ஜார் கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் திட்டமிட்டார் எனவும் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டு இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் பிரதமர் மோடி ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கனடா அரசாங்கம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 இந்தியர்களை கனடா அதிகாரிகள் கைது செய்தனர். 

    • அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.
    • தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    இதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்தது. இவ் விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன்பின் இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதி செயல் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரியும் என்று கனடா ஊடகமான தி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

    பெயர் தெரிவிக்காத கனடா மூத்த தேசிய பாது காப்பு அதிகாரியை மேற் கோள் காட்டிவெளியிடப் பட்ட அந்த செய்தியில், இந்த சதித்திட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.


    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய தாவது:-

    நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும் கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லா மல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.

    இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்து விட்ட இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன என்றார்.

    • நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர் என பேசியுள்ளார்.
    • வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும்.

    கனடாவில் வாழும் மக்களை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், "இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள் (கனடியரகள்) திரும்பி செல்லுங்கள்."

    "வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு சைமன் திரும்பி போ. நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர்," என பேசியுள்ளார். இவர் பேசும் போதே அங்கிருந்த சிலர் கத்தினர்.

    கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் நடந்த காலிஸ்தானி நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக, கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

    மேலும், இவர்கள் "ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று வலியுறுத்தி இருந்தார். ஒட்டாவாவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அவர் கருத்து தெரிவித்தார்.

    இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கை அடங்கிய வெளியாகியுள்ளது. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பின்னணியில், இந்தியா மற்றும் கனடா உயர் அதிகாரிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன.


    • இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து.
    • வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து நடவடிக்கை

    கனடாவில் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது.

    இந்த நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் பிராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 17-ந்தேதி இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு வருவதை கனேடியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது மிகவும் வருத்தமளிக்கிறது.

    திரிவேணி கோவிலுக்கு எதிராக பரப்பப்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும், கனேடிய இந்து சமூகம் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் போலீசாரை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    கனடாவில் உள்ள இந்து கோவில்களில், வருகிற 16,17-ந்தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் அமைப்பு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, கனடா எம்.பி., சந்தன் ஆர்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
    • இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் நிற்கிறார்

    கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்னர். காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.

    இந்த சம்பத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி போலீஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர்.

    கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான எஸ்எஃப்ஜெ [சீக் ஃபார் ஜஸ்டீஸ்] இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இந்தர்ஜித் கோசல் என்று நபர் எஸ்எஃப்ஜெ இயக்க ஒருங்கிணைப்பாளர் என்று தெரியவந்துள்ளது.

    முன்னதாக மேடையின் படிகளில் விரிக்கப்பட்டிருக்கும் இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

     

    ×