search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரையரங்கில் தன் அராஜகத்தை தொடரும் டிராகன் திரைப்படம்
    X

    திரையரங்கில் தன் அராஜகத்தை தொடரும் டிராகன் திரைப்படம்

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
    • இந்தப் படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது.

    திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றியை கண்டது.

    இன்றுடன் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்துள்ளது. திரைப்படம் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாக டிராகன் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×