search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூப்பர் ஸ்டார் எனும் இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல.. சீமான் பரபரப்பு கருத்து..
    X

    சீமான்

    சூப்பர் ஸ்டார் எனும் இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல.. சீமான் பரபரப்பு கருத்து..

    • நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதற்காக பத்திரிகையாளர் பிஸ்மி வீட்டிற்கு சென்று ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றும் விஜய்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றும் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து ரஜினி ரசிகர்கள் பிஸ்மி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    சீமான்

    இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

    தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ரஜினிகாந்த் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின். தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக விஜய் உச்சத்தில் இருக்கிறார்.

    இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான பிஸ்மியை, அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.


    சீமான் அறிக்கை

    ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே. மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று. ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது.

    இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




    Next Story
    ×