search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி
    X

    ஷங்கர்

    திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ௫ மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.


    பொன்னியின் செல்வன்

    ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ஷங்கர்

    அதில், "பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் கவர்கிறது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான வரலாற்று திரைப்படம். மணிரத்னம் சார் திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    Next Story
    ×