என் மலர்
சினிமா செய்திகள்
X
விஜய்க்கு கதை சொல்லிய மாரி செல்வராஜ்?
Byமாலை மலர்29 Jun 2023 2:42 PM IST (Updated: 29 Jun 2023 3:26 PM IST)
- பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்து கொண்டவர் மாரி செல்வராஜ்.
- இவர் விஜய்க்கு கதை கூறியதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்து கொண்டவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ், விஜய்யிடம் கதை சொல்லியதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதில், நான் விஜய்யிடம் கதையை விவரித்தேன். கதையை சொல்லி முடித்த பிறகு விஜய் சாரின் ரியாக்ஷன் "என்ன சார்". நான் ஒரு இயக்குனராக கதை கூறினேன், ரசிகராக அல்ல என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
X