என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஷுப்மன் கில்
அமைதியாக ஆரம்பித்து ஆக்ரோஷமாக முடித்த குஜராத் டைட்டன்ஸ்... மும்பை அணிக்கு 208 ரன்கள் இலக்கு
- டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
- மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் விர்திமான் சஹா 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின், டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபினவ் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார். அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.