search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: நோ-பால், வைடுக்கு டி.ஆர்.எஸ். முறை
    X

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: நோ-பால், வைடுக்கு டி.ஆர்.எஸ். முறை

    • நேற்றைய ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.
    • இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய டெல்லி-பெங்களூரு இடையிலான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் இடுப்பு உயரம் அளவுக்கு வீசிய பந்துக்கு டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.

    ரீப்ளேவுக்கு பிறகு அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.

    20 ஓவர் வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×