search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காசிக்கு நிகரான ஷேத்ரபாலபுரம் ஸ்ரீகால பைரவர்
    X

    காசிக்கு நிகரான ஷேத்ரபாலபுரம் ஸ்ரீகால பைரவர்

    • மேற்கு நோக்கிய கருவறையுடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது.
    • மேலும் ஸ்ரீகால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை.

    ஸ்ரீபைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது.

    கும்பகோணம் மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த ஸ்ரீகால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.

    வடக்கே உள்ள காசி தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடிய பலனை இங்குள்ள ஐந்து தீர்த்தங்களிலும் மூழ்கி ஒரே நாளில் அடையலாம் என்பது ஐதீகம். அதனால் இந்த ஷேத்ரபாலபுரத்தை காசிக்கும் வீசமதிகமான சிறப்பு பொருந்திய தலம் என்பர்.

    இந்த ஊரில் பிறந்தவர்களுக்கும், இந்த ஊரில் இறப்பவர்களுக்கும் ஸ்ரீகால பைரவர் வலது காதில் தாரக மந்திரத்தை உபதேசித்து யம வாதனையை நீக்குவதாக கூறப்படுகிறது.

    மேற்கு நோக்கிய கருவறையுடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது.

    மேலும் ஸ்ரீகால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை.

    காசியை வீட வீசமதிக பலன் தரும் என்பதால் காசிக்குச் சென்று ஸ்ரீகால பைரவரை வழிபட இயலாதவர்கள் இத்தல பைரவரை வழிபட்டும், காசி தீர்த்தமான கங்கையில் நீராட முடியாதவர்களும் இத்தலத்திற்கு வடக்கே ஓடும் காவிரியில் நீராடியும் காசிக்கு நிகரான புண்ணியத்தைப் பெறுகின்றனர்.

    தினசரி இத்தலத்தில் ஒரு கால பூஜையே பகல் 12 மணிளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 12 மணிக்கு நடைபெறும். உச்சிக்கால பூஜை சிறப்புத் தரிசனமாகக் கூறப்படுகிறது.

    காலையில் 8 மணிக்குள் காவிரியில் நீராடி 10.30 மணியளவில் சூலத்தீர்த்தத்தில் நீராடி 11 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்ரீகால பைரவரை தரிசிப்பவர்களுக்கு காசியின் எல்லாப் புண்ணியங்களும் ஒரு சேரக் கிடைக்கும்.

    அது தவிர, கொடியவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ரோகம் யாவும் அன்றைய தினமே நீங்கி இன்பம் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×