search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நினைத்த காரியம் நிறைவேற... இந்த பரிகாரம் செய்யுங்க...
    X

    நினைத்த காரியம் நிறைவேற... இந்த பரிகாரம் செய்யுங்க...

    • கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
    • கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும்.

    அனைவருடைய வாழ்விலும் சரி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்கை யாருக்குமே கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

    பொதுவாக உப்பு என்பது ஒரு ஆன்மிகம் பொருளாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் இதன் காரணமாக தான் கல் உப்பை ஆன்மிக பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    பரிகாரத்தை செய்யும் முறை: இரவு உறங்குவதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதாவது ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கல் உப்பு ஒரு கைப்பிடியளவு மற்றும் அந்த கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.

    இந்த டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்திற்கு அருகாமையில் வைத்து உங்கள் மனதில் நிறைவேற வேண்டிய விஷயங்களை மனதில் நினைத்து அந்த விஷயம் நிறைவேற வேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு உறங்க செல்லுங்கள்.

    பின் மறுநாள் இரவு இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் அல்லது நீரோட்டம் உள்ள இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் இது போன்று செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நம்பிக்கையுடன் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றிபெறும்.

    Next Story
    ×