என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/11/1819993-srirgan.webp)
X
சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
By
மாலை மலர்11 Jan 2023 11:47 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராப்பத்து உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் ராப்பத்து உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.
இந்த உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, சந்திரகலை பதக்கம், வைரலட்சுமி பதக்கம், நெற்றிச்சரம், ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், ரத்தின லெஷ்மி பதக்கம், பங்குனி உத்திர பதக்கம், மகரி, 8வட முத்துச்சரம், பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
X