search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுவாமிமலை சாமிநாதசுவாமி கோவிலில் 30-ந்தேதி பஞ்சமூர்த்தி சாமிகள் புறப்பாடு நடக்கிறது
    X

    சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    சுவாமிமலை சாமிநாதசுவாமி கோவிலில் 30-ந்தேதி பஞ்சமூர்த்தி சாமிகள் புறப்பாடு நடக்கிறது

    • 4-ந்தேதி காவிரியில் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 5-ந்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    சுவாமிமலை முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினார்.

    கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந்தேதி இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ந்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×