search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செங்கோட்டில், 51 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டும் மழையில் தெப்பத்தேர் திருவிழா
    X

    திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருச்செங்கோட்டில், 51 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டும் மழையில் தெப்பத்தேர் திருவிழா

    • பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.
    • அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருச்செங்கோட்டில் உள்ள ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு சுமார் 51 ஆண்டுகளுக்கு பின்னா் நேற்று தெப்பத்தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு தெப்பத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

    அதன்படி கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனி வந்த அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடுகுள பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், உதவி கலெக்டர் கவுசல்யா, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன் அர்த்நாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×