என் மலர்
வழிபாடு
திருவண்ணாமலையில் அதிகாலை முதலே கிரிவலம் சென்ற பக்தர்கள்
- இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர்.
மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விஷேச நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
ஆனி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது.
இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
சென்னை, வேலூர் உள்பட முக்கியமான நகரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.