search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆச்சரியப்படுத்தும் திருவண்ணாமலையின் தத்துவம்
    X

    ஆச்சரியப்படுத்தும் திருவண்ணாமலையின் தத்துவம்

    • இங்கு மலையே கடவுள்.
    • ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம்.

    திருவண்ணாமலை தலத்தில் எட்டு திசையில் இருந்து பார்க்கும் போதும் மலை எட்டுவித அமைப்பாய் தெரியும்.

    மற்ற இடங்களில் மலை மேல் கடவுள். இங்கு மலையே கடவுள்.

    இங்கு மலை வடிவில் சுயம்பு என்பதால், தீபத் திருநாளன்றி வேறெந்த நாளிலும் மக்கள் மலை ஏறுகிறதில்லை. இத்தனை பெரிய சுவாமிக்கு எப்படி அபிஷேக ஆராதனை நடத்துவது? சாமான்ய உள்ளங்களில் மருட்சி ஏற்படும். எனவே தான் ஈசன் மலை அடிவாரத்தில் ஒரு சிறிய சுயம்பு லிங்கமாய் அமர்ந்து கொண்டார்.

    இதுதான் இன்றைய அண்ணாமலையார் கோவில். கீழ்த்திசையில் இருந்து நாம் மலையைப் பார்க்கின்ற போது ஒற்றையாய் தெரியும். அது ஏகலிங்க தத்துவம். மலை சுற்றும் பாதையில் இரண்டாகத் தெரியும். அது அர்த்த நாரீஸ்வர தத்துவம். மலையின் மேற்றிசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும்.

    அது திரிமூர்த்தி தத்துவம், மலையை சுற்றி முடிக்கின்ற கட்டத்தில் ஐந்து முகங்களாகக் காணப்படும். ஈஸ்வரனின் பஞ்சமுக தத்துவம். இப்படி அநேக தத்துவங்களை தன்னுள் அடக்கி அமைதியாய் கொலுவீற்றிருக்கிறது அண்ணாமலை.

    Next Story
    ×