என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    முனீச்:

    மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்புர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-8 (6-8) என இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லூசியானோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடி மோதியது.

    இதில் இந்திய ஜோடி 23-25, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, ஜெர்மனியின் ஜேன்சன்-நுயென் ஜோடி மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக நாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உடன் மோதினார். இதில் ரஜாவத் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் 21-18, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஓல்டர்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
    • எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார்.

    ஜெர்மனியில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(சிஎஸ்யு/சிடியு) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    நேற்று (பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகலின்படி ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

    எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி(ஏ.எப்.டி) 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம் இது. 

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இக்கட்சிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • QR குறியீடுகளை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது
    • இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.

    ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள கல்லறைகளில் திடீரென தோன்றிய மர்மமான QR குறியீடுகள் கடந்த சில மாதமாக ஒரு பெரும் புதிராக மக்களை பீதியில் ஆழ்த்தின.

    கடந்த டிசம்பரில் அங்கு மர்மமான முறையில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்டிக்கர்களை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது வினோதமான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த QR குறியீடு ஸ்டிக்கர்கள் மியூனிக்கில் உள்ள வால்ட்பிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ப்ரீட்ஹாஃப் மற்றும் ப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் காணப்பட்டன.

    சிலர் இதை ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட் என்றும், மற்றவர்கள் இது சில குறும்புக்காரர்களின் செயல் என்றும் கருதினர். கல்லறைகள் நிர்வாகத்தின் தலைவரான பெர்ன்ட் ஹோரோஃப், இதை மிகவும் விசித்திரமான சம்பவம் என்றும், இந்த ஸ்டிக்கர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் கூறினார்.

     

    கல்லறைகளில் இருந்து ஸ்டிக்கர்களை அகற்றுவது அதிக செலவை ஏற்படுத்துவதால், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.

    இறுதியில், ஒரு உள்ளூர் தோட்டக்கலை நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.

    அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்பட உள்ளது என்பதை அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது.

     

    இந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஆல்ஃபிரட் ஜான்கர் பேசுகையில், எங்கள் நிறுவனம் பெரிய அளவில் செயல்படுகிறது, அனைத்து வேலைகளும் முறையாக செய்யப்பட வேண்டும்.

    கல்லறைகளைப் பழுதுபார்ப்பதற்கு கற்களை அகற்றி, சுத்தம் செய்து, பின்னர் மீண்டும் நிறுவ வேண்டும். இதனால் செயல்முறை சிக்கலானதாகிறது. எனவே குழப்பம் ஏற்படாமல் இருக்க அடையாளத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டது என்று விளக்கினார்.

    • ஜெர்மனியில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
    • ஆளும் கட்சியின் ஒலாப் ஸ்கால்ப்ஸ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏ.எப்.டி. இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஜெர்மனி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி தோல்வியை ஒப்புக் கொண்டார் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ்.

    • ஜெர்மனியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கார் பாய்ந்தது.
    • இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

    முனீச்:

    ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில், முனீச்சில் கூட்டத்தில் வேகமாக புகுந்த கார் மோதியதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அங்கிருந்த போலீசார் கார் ஓட்டி வந்த 24 வயது நபரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர் ஆப்கனைச் சேர்ந்த அகதி என தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது.
    • இந்த தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் பவாரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை, ஒரு பெரியவர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

    இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெற்றது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாக்குதல் நடந்த இடத்தில் ஒருவரை கைதுசெய்த போலீசார், வேறு யாருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தினர்.

    இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
    • எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை.

    அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உதவி புரிந்தார். வெளிப்படையாக பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் மில்லியன் கணக்கில் தேர்தல் நிதி அளித்தார். இதனால் டொனால்டு டிரம்ப் அவரை முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.

    இந்த நிலையில் ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளார்.

    எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் "AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஜெர்மனி செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பை மேற்கொள்காட்டி தனது கருத்தை இரட்டிப்பாக்கினார்.

    இந்த நிலையில் ஜெர்மன் அரசு செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் "இதன் உண்மை என்னவெனில், எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிககம் செலுத்த முயற்சி செய்தி கொண்டிருக்கிறார். ஜெர்மனியில் தேர்தல் வாக்காளர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்தும் வாக்குகளால் முடிவு செய்யப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் தேர்தல் ஜெர்மன் விவகாரத்தைச் சேர்ந்தது. எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனி கடந்த மாதம் ஒலாஃப் ஸ்கால்ஸின் அரசு வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
    • சவூதி அரேபிய மருத்துவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார்.

    ஜெர்மன் பாராளுமன்றத்தை அந்நாட்டின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்றைய தினம் கலைத்து உத்தரவிட்டார்.

    சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி தேர்தல் தேதியை ஜனாதிபதி நேற்று அரசை கலைத்து அடுத்த தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளார்.

    ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த பிப்ரவரி 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி அறிவித்தார்.

     

    மேலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தேர்தல் பிரச்சாரம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனி உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக கிழக்கு நகரமான மாக்டேபர்க்கில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, 50 வயதான சவூதி அரேபிய மருத்துவர் தலேப் அல்-அப்துல்மோசென் என்பவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார். இதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டு அரசியலிலும் எதிரொலித்து வருகிறது.  

    ×