என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள மலைக்குச் சென்றார்.
    • கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    தெலுங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் ஊர் கொண்டாபேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றார்.

    தரிசனம் முடிந்து மாலை கோவிலில் நடந்த பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு 11.30 மணி அளவில் கோவில் அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.

    கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள மலைக்குச் சென்றார்.

    அப்போது கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மலையில் மது குடித்து கொண்டு இருந்த அவரது நண்பர்கள் 6 பேர் வந்து இளம்பெண்ணை மடக்கினர்.

    இளம்பெண்ணின் உறவினரின் கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் அவர்கள் 7 பேரும் சேர்ந்து மது அருந்தியபடி விடிய விடிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தப்பிச் சென்றனர்.

    அதிகாலை இளம்பெண் மற்றும் உறவினர் தப்பி வந்து மெஹபூபா நகர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாமி தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.
    • அவரை பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்றனர்.

    தெலுங்கானாவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்னூல் மாவட்டத்தில் உர்கொண்டபேட்டாவில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 30 வயது பெண் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    நேற்று இரவு அந்தப் பெண் தனது உறவினருடன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்றார். தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.

    நள்ளிரவில், அந்தப் பெண் கோயிலுக்கு அருகிலுள்ள புதர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்றனர். சத்தம் கேட்டு உறவினர் அவளைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் தாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பின்னர், அந்த நபர்கள் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவத்திற்குப் பிறகு, உர்கொண்டா போலீசார் விசாரணையைத் தொடங்கி ஆறு பேரைக் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் எட்டு பேர் ஈடுபட்டதாகவும், இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
    • லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக லட்டு தயார் செய்து வருகின்றனர்.

    இந்த லட்டுகள் ஆதிவாசி கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கர்ப்பிணி பெண்களை பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது. செம்பருத்தி பூக்கள், வெல்லம், திராட்சை நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு இந்த லட்டுகள் தயார் செய்யப்படுகிறது.

    சத்தான இந்த லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது என்பதால் தெலுங்கானாவில் அதிகளவில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் 20 குவிண்டால் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.

    இந்த லட்டு தயாரிக்கும் பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆதிவாசி மகிளா சங்கத் தலைவர் குமராம் பகுபாய் கூறுகையில்:-

    பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலத்தில் அதிக ஆர்வத்துடன் கர்ப்பிணிகளுக்கான லட்டு தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த கடுமையாக உழைப்போம் என்றார்.

    • சூரியதேவ் என்ற இளைஞர் 2 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.
    • இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற 2 பெண்களை ஒரே நேரத்தில் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், தனது 2 காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து சூரியதேவ் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சூரியதேவின் திருமண வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    • லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • ஐ.பி.எல். தொடரில் ஷர்துல் தாக்குர் 100 விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இணைந்துள்ளார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாக்குருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    ஷர்துல் தாக்குர் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஊதா நிற தொப்பியையும் தன்வசப்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது பெற்றபோது ஷர்துல் தாக்குர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல்லில் எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்தபோது ஜாகீர்கானிடமிருந்து அழைப்பு வந்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி என்னைத்தான் முதலில் அணுகியது. அதனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன்.

    கிரிக்கெட்ல நல்ல நாட்களும் இருக்கும், கெட்ட நாட்களும் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான் போகணும். ஸ்கோர்ஷீட்டில் இருப்பது எப்பவும் நல்லதுதான், ஆனா ஆட்டத்தை வெல்வது எனக்கு முக்கியம்.

    நான் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்துகிட்டே இருக்கேன். விக்கெட் பத்தியோ, ரன் பத்தியோ நான் அதிகம் பார்க்கல. மேட்ச் வின்னிங் பெர்பார்மென்சை மட்டுமே காட்ட விரும்புகிறேன்.

    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் தயார் செய்யப்படுவது பந்துவீச்சாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

    அவங்க பவுலர்களை ரொம்பவே தாக்குறாங்க. அதனால அவங்களை ஏன் கடுமையாக தாக்கக்கூடாது? கூட்டா அவங்களை எதிர்த்துப் போராடுவதுதான் திட்டம். ஆரம்பத்துலயே விக்கெட் எடுத்தா நல்லா விளையாடுவோம்னு நினைத்தோம் என தெரிவித்தார்.

    • லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 4 முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 190 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய லக்னோ 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். அனிகெட் வர்மா 36 ரன்னும், நிதிஷ் ரெட்டி 32 ரன்னும், கிளாசன் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 15 ரன்னில் வெளியேறினார். கடைசியில் இறங்கிய அப்துல் சமத் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டாஸ் வென்று சொன்னபடி ரிஷப் பண்ட் செய்து வெற்றி பெற்றுவிட்டார்.

    • சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் 16 நாட்கள் மேசாமான இரவை சிறையில் கழித்தேன்- ரேவந்த் ரெட்டி.
    • நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள்- கேடி ராமராவ்.

    தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் ஒருவாரம் கழித்து அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இது தொடர்பான பிஆரஎஸ் கட்சி செயல் தலைவர் கே.டி. ராமராவ் சட்டசபையில் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் கொடுத்தார். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் ஜெயிலில் 16 நாள் கொடூரமான இரவை கழித்தேன் என ரேவந்த் ரெட்டி கடும் பதிலடி கொடுத்தார்.

    இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    16 நாட்கள் நான் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டேன். அது பயங்கரவாதிகள் அடைக்கப்பட்ட சிறை. என்னை யாரையும் சந்திக்க அனுமிக்கவில்லை. அப்போதும் கூட என்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு தொடர்ந்து மக்கள் நலனுக்காக பணியாற்றினே். என்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு சட்டத்தின்படி வெறும் 500 ரூபாய்தான் அபராதம்.

    நான் அடைக்கப்பட்ட சிறை அறையில் இரவு முழுவதம் லைட் எரிந்து கொண்டிருந்தது. மேலும் சுகாதாரமற்றதாக இருந்தது. தேவைப்பட்டால் எம்எல்ஏ-க்களை அழைத்துச் சென்று உண்மை நிலைமை காட்ட முடியும். சிறையில் இருந்து விடுதலை ஆனதும், அந்த துயரத்தில் இருந்து விலக மரத்தடியில் தூங்கினேன்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    இதற்கு கே.டி. ராமராவ், "நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள். யாராவது ஒருவர் உங்களுடைய ஜூப்ளி ஹில்ஸ் பேலஸ் மீது டிரோன் பறக்கவிட்டு, உங்களுடைய மனைவி அல்லது குழைந்தைகள் படதெ்தை எடுத்தால், அமைதியாக இருப்கீர்களா?. உங்கள் குடும்பத்தைப் பற்றி வரும்போது நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள்.

    பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவாரம் வரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த ரேவந்த் ரெட்டி "எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக மோசமான வார்த்தையை பயன்படுத்தினால் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள முடியும்" என்றார்.

    சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது கே.டி. ராமராவ் வீட்டின் மேல் டிரோன் பறக்கவிட்டு படம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
    • ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.

    மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.

    இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.

    ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

    தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். 

    • தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
    • புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கட்டுமானத்திலிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

    பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

    புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசித்து வருகிறார்
    • இதில் அப்பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

    பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசித்து வருகிறார். தனது போனை ரிப்பேர் செய்யும் பொருட்டு கடந்த சனிக்கிழமை இரவு ஐதராபாத்துக்கு புறநகர் (MMTS) ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

    அப்போது இளைஞன் ஒருவன் ரெயிலில் பெண்ணை நெருங்கி தவறாக நடக்க முயன்றுள்ளான். அவரிடமிருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அப்பெண்ணுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

    வழிப்போக்கர் ஒருவர் காயங்களுடன் கிடந்த பெண்ணை பார்த்தபின் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அப்பெண் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அத்துமீறிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
    • குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் முசம்மில் கான். கம்மம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் பெருமை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.


    பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து சுவீட் பாக்ஸ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே கலெக்டர் முசம்மில் கான் பெண்களின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் 19 டீ கடை மற்றும் உணவகங்களை தொடங்கி வைத்து உள்ளார்.

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.

    கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.

    பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×