என் மலர்tooltip icon

    ஈரான்

    • சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
    • நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார்

    ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்ப்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி [52 வயது] கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

     

    சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார் நர்கிஸ் முகமதி. எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ காரணங்களுக்காக மூன்று வாரங்கள் சிறையில் இருந்து கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

    அவரை நோபல் பரிசுக் குழு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இந்த உரையாடலில் வீடியோவை நோபல் பரிசு குழு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

     

    எனது சக கைதிகளில் ஒருவர் சிறையில் ஆண்கள் வார்டில் இருந்த தனது கணவரை தொடர்புகொண்டார். அவர்கள் மூலம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற செய்தியை அறிந்துகொண்டோம். அது நம்பமுடியாத\தாக இருந்தது

    எவின் சிறைச்சாலை முழுவதும் இந்த செய்தி பரவியபோது பெண்கள் வார்டு "பெண் வாழ்க்கை சுதந்திரம்"[Woman Life Freedom] என்ற முழக்கத்தால் நிறைந்ததை முகமதி அந்த வீடியோவில் நினைவு கூர்ந்தார். இந்த வீடியோவில் பச்சை நிற டாப்ஸ் அணிந்திருந்த முகமதி தலையில் எந்தவித உடையையும் [ஹிஜாப்] அணியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முகம்மதியின் நிபந்தனையற்ற நிரந்தர விடுதலைக்கு உளமெங்கிலும் இருந்து சமூக செயல்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    • On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.
    • இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றார்

    புதிய ஊருக்கு சென்றாலே திக்கு திசை தெரியாமல் முழிக்கும் நிலைமைதான் அனைவர்க்கும். அதே புதிய நாட்டுக்கு சென்றால் அதுவும் அங்கு தெரிந்தவர் யாரும் இல்லாமல் இருந்தால் பெரும்பாடு தான். அந்த நிலைமைதான் யூடியூபில் டிராவல் VLOGGING செய்யும் இந்தியர் ஒருவருக்கு ஈரானில் ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலானோர் புது இடங்களைப் பார்க்க வேண்டும், பயணங்கள் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பர். ஆனால் வீடு, பொறுப்பு, வேலை என பலவிதமான கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

    வேலையிடம் - வீடு என இந்த இடைப்பட்ட அளவு மட்டுமே அந்த சங்கிலியின் நீளம் இருக்கும். எனவே புது இடங்களுக்கு பயணித்து அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு புது இடங்களுக்கு பயணம் செய்து வீடியோ பதிவு செய்வோர் VLOGGER என்று அழைக்கப்படுகின்றனர்.

    அந்த வகையில்,On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.அங்கு என்ன ஏது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

     

    ஈரான் விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த இந்திய யுடியூபர் விமான நிலையத்தில் வைத்து ஹுசைன் என்ற பாகிஸ்தானிய இளைஞனை சந்தித்துள்ளார். இவர் ஈரானில் பயின்று வரும் மாணவர் ஆவார். இந்தியரின் செல்போனில் நெட்வொர்க் பிரச்சனை இருந்துள்ளது. எனவே அதற்கு தீர்வுகாண ஹுசைன் முன்வந்துள்ளார். இந்தியரை டாக்சி மூலம் தனது வீட்டுக்கு ஹுசைன் அழைத்து சென்றார்.

     இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றபோது, தனது வீடியோவில் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

    ஆனாலும் இந்தியருக்கு நெட்வொர்க் கிடைக்கும் சிம்கார்டை வழங்க ஹுசைன் தனது வீட்டில் சிரமம் எடுத்து தேடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தியரின் நெட்வொர்க் பிரச்சனையை ஹுசைன் கடைசியாக தீர்த்து வைத்தார். அதன்பின் இந்தியர் ஈரானில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கிறார்.

    இது அனைத்தும் வீடியோ ஆக்கப்பட்டு அவர் இதை வெளியிடவே, YouTube இல் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பிற சமூக ஊடங்களிலும் வைரலாகி வருகிறது.

    பொதுவாகவே பாகிஸ்தானியர்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் இந்தியர்களின் எதிரிகள் என இந்திய சினிமாக்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பொதுப்படையான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அது வடிகட்டிய பொய் என்பதை நிரூபிக்கத் தவறுவதில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி [85 வயது] இன்று வரை அந்த பதவியில் இருக்கிறார்.

     

    ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும். இந்நிலையில் தற்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி அயத்துல்லா காமேனியின் அவசர அழைப்பின்படி ஈரான் நிபுணர்கள் சபை [Assembly of Experts] -இல் அங்கம் வகிக்கும் 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த வாக்கெடுப்பில் ருஹோல்லா கோமேனியை அடுத்த தலைவராக ஏற்கும் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இல்லாமல் அடுத்த தலைவர் தேர்வு நடப்பது வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சி மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சுவதால் இந்த தலைவர் தேர்வு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அலி  காமேனி பதவி விலகி மொஜிதாபாவிடம் அதிகாரம் கைமாறும் என்று கூறப்படுகிறது.  

     

    கடந்த இரண்டு வருடங்களாக மொஜிதாபா காமேனிக்கு இந்த தலைமை பொறுப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது ஈரான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் மொஜிதாபா ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.

    ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களை ஒடுக்கியவர் மொஜ்தபா. எனவே  அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    • பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதல் ஊக்குவிக்கப்படும்
    • குறிப்பாக, இளம் வயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நல சிகிச்சை மையங்களை திரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிரதான இஸ்லாமிய நாடுகளுள் ஒன்றான ஈரானில் குடியரசு ஆட்சி முறை இருந்தாலும் இஸ்லாமிய சட்டங்களின் படியே ஆட்சி நடந்து வருகிறது. மதத் தலைவர் அலி ஹொசைனி கமேனி அந்நாட்டின் உயர்மட்ட தலைவராக உள்ளார்.

    பொது இடத்தில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் மத்தியில் இதுபோன்ற ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. எனவே ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நோய் இருப்பதாக கருதப்பட்டு அவர்களின் மனநிலையை சரிசெய்ய 'மனநல சிகிச்சை மையம்' அமைக்கபட உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி, ஹிஜாப்பை துறப்பவர்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை இங்கு வழங்கப்படும். குறிப்பாக, இளம் வயது பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

     

    பெண்களிடம் கண்ணியம், அடக்கம், கற்பு மற்றும் ஹிஜாப் அணிதலை ஊக்குவிப்பதே இந்த க்ளினிக்கின் நோக்கம் " என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது மனித உரிமை மீறல் என இந்த இந்த அறிவிப்புக்கு மனித உரிமை மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    சமீபித்தில் ஈரானில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழகத்தில் வந்து அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் அந்த பெண் மனநலம் சரியில்லாதவர் என்று நிர்வாகம் தரப்பில் முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
    • ஒரு அணு ஆயுத்ததில் யுரேனியத்தை சுற்றி உள்ள பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் குண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள்.

    அக்டோபர் 26 தாக்குதல்  

    காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வான் பரப்புக்குள் நுழைந்து மூன்று கட்டங்களாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலால் தங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.

     

    பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ்

    ஆனால் ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக 3 அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் படு ரகசியமாக வைத்திருக்கும் பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ் [Parchin military complex] அணு ஆயுத ஆராய்ச்சித் தளத்தில் உள்ள டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

     

     ஆராய்ச்சி

    முன்னதாக தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளியுலகில் ஈரான் மறுத்து வந்த நிலையில் இந்த டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கருதப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்கிலியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக இருந்தது.

    ஆனால் செயலிழந்ததாக நம்பப்பட்ட இந்த டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஈரான் ஆராய்ச்சிகளை தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்த தளம் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    டேல்கான் 2

    அணு ஆயுதத்தில் உள்ள யுரேனியத்தை சுற்றி அமைக்கப்படும் பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் வெடிமருந்துகள் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் ஆகும். இந்த பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் தயாரிக்க பயன்பட்ட சாதனம் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 2022-ம் ஆண்டு மாதம் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி 22 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அவர் திடீரென இறந்தார். இதையடுத்து அந்நாட்டில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்றது

    இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர் அந்த மாணவியை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

    ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக தான் அப்பெண் தனது ஆடைகளை கலைந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

    உள்ளாடைகளுடன் காணப்பட்ட பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் மனநல பிரச்சனை உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப் தெரிவித்தார்.

    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
    • ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    தெஹ்ரான்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 26-ம் தேதி ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஈராக்கில் இருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயரிய தலைவரான அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அயத்துல்லா அலி கமேனி, ஈரான், ஈரான் மண் மற்றும் எதிர்ப்பு கூட்டணிக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈராக்கில் செயல்படும் பயங்கரவாதிகள்) எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.
    • மூன்று கட்டங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

    இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து 8இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.

     

    இதற்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

    இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது புலனாகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் சிரியா, ஈராக் என மற்ற நாடுகள் உள்ளதால் மிகவும் தொலைவில் இருக்கும் ஈரானை ஏவுகணை மூலம் தாக்கினால் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் விழலாம். அது சர்வதேச சிக்கலில் முடியும். எனவே பைட்டர் பிளேன்களை 2000 கிலோமீட்டர் அனுப்பி மட்டுமே இந்த தாக்குதலை செயல்படுத்த முடியும் என்று இஸ்ரேல் யோசித்து இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கிறது.

    கடந்த 25 நாட்களாக வானிலை மோசமாக இருந்ததால் பைட்டர் பிளேன்கள் குறிவைப்பதில் சிரமம் இருந்ததால் தற்போது இத்தனை நாட்கள் தள்ளி இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தாக்குதலை ஈரான் திறம்பட சமாளித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 2 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த தாக்குதல்களால் தங்களுக்கு அதிக பாதிப்பு இல்லை எனவும் இஸ்ரேலுக்கு தங்களின் எதிர் தாக்குதலால் பாதிப்பு எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஈரான் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தினால் ஈரான் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் உடனே தாக்குதல் நடத்தப் பார்க்காது என்றே ஈரான் அதிகார வட்டாரங்களில் இருந்து செய்தி வருவதாக சர்வதேச  ஊடகங்கள் கூறுகின்றன. ஆனாலும் மத்திய கிழக்கில் போர் உருவாகும்  பதற்றம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.

    • ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
    • ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல்களில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மறைமுகமாக ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நோக்கி சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு பதிலடியாக துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளது.

    ஈரானில் உள்ள ராணுவ தளவாடகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறும்வேளையில், தெஹ்ரானுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் கூறியிருப்பதாவது:- இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும், அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றன.

    ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உள்ளிட்டவைகளுக்கு உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இதனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன
    • எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரான் இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த இந்த சைபர் தாக்குதலால் ஈரான்  அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன. முக்கியமாக  ஈரான் அணுசக்தி மையங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், துறைமுகங்கள் என அனைத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

     

    முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

     

    இந்நிலையில் தற்போது ஈரான் அரசு நிர்வாகங்கள் மீதே நடந்துள்ள இந்த சைபர் தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

    • ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம்.
    • அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராதபோது இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை ஏவியது ஈரான்.

    இதனைத்தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடந்த அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் திட்டம் தீட்டி வருகிறது, ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் இஸ்ரேல் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் இருக்கும் வளைகுடா அரபு நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கும் காட்டும் நாடுகளுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ஈரானின் எச்சரிக்கை ரகசிய சேனல்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    • ஈரானை தொடர்ந்து லெபனானும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது.
    • இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது

    இஸ்ரேலில் ஒரு இரவு 

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 180 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியது ஈரான். 1 வருட கால பொறுமைக்கு பின்னர் மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெகுகாலம் நிலைக்காது, மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மதத்தவைவர் அயத்துல்லா காமினி கையில் ரைபிள் துப்பாக்கியுடன் பொதுவெளியில் தோன்றி பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

     

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் எண்ணெய்க் கிணறுகளையும், அணு சக்தித் தலங்களையும் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது என்றும் அதற்கான விலையை நிச்சயம் செலுத்தும் என்றும் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார்.

    ஈரானில் ஒரு இரவு 

    அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த போர் தீவிரமானதால் தங்களின் மீது அதீ நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அச்சத்தில் உள்ளது.

    எனவே  நேற்றைய இரவு முழுவதும் ஈரானில் அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன. நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு 9 மணியில் இருந்து இன்று [திங்கள் கிழமை] காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.

     

    ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் ஈரானில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

    தயார்

    இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகம் மீதும், காசா பகுதிகள் மீதும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஹைபா [HAIFA] நகர் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை வீசியுள்ளது. 

    ×