என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • வடக்கு காசாவுக்கு நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.

    காசா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஒப்பந் தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண் பிணைக்கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    அவர் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. அவர் வருகிற 1-ந்தேதி விடுவிக்கப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்தது.

    இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.


    காசா மீது இஸ்ரேல் போரை தொங்கியபோது வடக்கு காசாவை முதல் முதலில் குறிவைத்து சரமாரியாக தாக்கியது. அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.

    தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அகதிகள் முகாம், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    • டிரம்பிற்கு பெஞ்சமின் நேதன்யாகு ஜனவரி 26-ம் தேதி நன்றி தெரிவித்தார்.
    • இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைவதால் நேதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நேதன்யாகு இருப்பார். முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக அதிபர் டிரம்பிற்கு பெஞ்சமின் நேதன்யாகு ஜனவரி 26-ம் தேதி நன்றி தெரிவித்தார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக அதிபர் டிரம்பிற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
    • ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

    பிணைக்கைதிகளான ஆகிய 3 இளம்பெண்களை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று விடுவித்தது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 

    பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வந்தடைந்த அவர்கள், உடல்நிலை பரிசோதனைக்கு பின் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. 

     

    ஆனால் ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் 4 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி நேற்று, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    இந்நிலையில், ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் இடம்பெயர்ந்த ஆறரை லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாசின் அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது Kibbutz Nir Oz பகுதியில் இருந்து அர்பெல் யாஹுட் கடத்தப்பட்டார். அதே தாக்குதலில் அவரது சகோதரர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் பலர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    • முதல் கட்டமாக 3 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது
    • இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது.

    இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிரொலியாக இரண்டாவது கட்டமாக 4 பெண்கள் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் இஸ்ரேல் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    • அமலுக்கு வந்துள்ள இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
    • விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும்.

    கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர்.

    போர் நிறுத்தம் நேற்று மதியம் 12 மணிக்கு அமலுக்கு வரவிருந்தது. ஒப்பந்தப்படி இருதரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்கள் பெயர் விவரங்களை 24 மணி நேரத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது.

    ஆனால் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் விவரங்களை வெளியிடவில்லை. சுமார் 2 மணி நேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது. அதன்படி, ரோமி கொனின் ( 24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்தது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை செய்யப்பட்ட 3 பிணைக்கைதிகளும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    • முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

    போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

    அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.

    அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருந்தது. இந்த நிலையில், பண்யக்கைதிகளின் பட்டியலை வழங்கும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    மேலும் விடுவிக்கப்படும் பயணக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயணக்கைதிகளின் பட்டியலை தரும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணக்கைதிகளின் பட்டியல் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் படி, காசா மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுகாதாரம், சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என எகிப்து தெரிவித்து உள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இந்திய நேரப்படி இன்று மதியத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்பட்டது.

    • முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

    போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

    அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.

    அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால், அதை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலை பெறும் வரை நாங்கள் கட்டமைப்பை நோக்கி முன்னேற முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே பொறுப்பு. தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவோடு போரை மீண்டும் துவங்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
    • ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

    காசா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. முதலில் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வந்தது.

    பின்னர் ஒப்பந்தத்தை இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரிசபை ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் முழு மந்திரிசபைக்கு பரிந்துரைக்கப்பட்டது.


    இதற்கிடையே ஹமாசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் முழு மந்திரிசபை இன்று அதிகாலை ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

    6 வார கால போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படும். இஸ்ரேலிய படைகள் காசாவின் பல பகுதிகளில்இருந்தும் பின்வாங்கும்.

    ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள 33 இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதேபோல் 735 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. அதேபோல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதன்மூலம் காசா மீதான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வர உள்ளது.

    • 6 வாரங்கள் போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
    • பிணயக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 150 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்குள் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் 100 பிணயக்கைதிகளை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை தயாரானது. ஆனால் கடைசி நேர ஆதாயத்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுப்பதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் அதை மறுத்தது.

    பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட இருக்கிறது.

    6 வாரம் போர் நிறுத்தத்தின்போது முதற்கட்டமாக 33 பயணக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் எனத்தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 95 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்ய இருக்கிறது.

    இஸ்ரேல் நேரப்படி நாளை மாலை 4 மணிக்கு முன்னதாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் அனைவரும் இளைஞர்கள் அல்லது பெண்களாக இருப்பார்கள்.

    அதேவேளையில் ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளில் பலர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இதனால் பிணயக்கைதிகள் பெயர் வெளியிடப்பட்டால்தான் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுடன் காசா பகுதியில் உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

    போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

    அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அதற்கு பிந்தைய வழிமுறைகள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

    அதன்படி,பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    "பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவால் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடைசி நிமிட சலுகைகளை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.

    "பிரதமர் அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவையை கூட்ட உத்தரவிட்டார். பின்னர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அரசாங்கம் கூடும்," என்று நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பணயக்கைதிகளின் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் திரும்பியதும் அவர்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.

    இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதைத் தொடர்ந்து பாலஸ்தீன கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, போருக்கு நிரந்தர முடிவுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.

    போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் அமெரிக்கா கடந்த புதன் கிழமை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியது.
    • ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

    முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விவரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, டஜன் கணக்கான பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

    "நாம் இப்போது அனுபவிக்கும் உணர்வை, விவரிக்க முடியாத, விவரிக்க முடியாத உணர்வை யாராலும் உணர முடியாது," என்று மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் மஹ்மூத் வாடி கூறினார்.

    • போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்தன.
    • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    டெல் அவிவ்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×