என் மலர்
நியூசிலாந்து
- எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
- இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது
- மழை காரணமாக டி20 போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 118 ரன்கள் எடுத்தபோது மழையால் தடைபட்டது.
ஆக்லாந்து:
ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 10.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹெட் 33 ரன்னும், ஷாட் 27 ரன்னும், மெக்ஸ்வெல் 20 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவரில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் நியூசிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
ஆட்ட நாயகனாக மேத்யூ ஷாட்டும், தொடர் நாயகனாக மிட்செல் மார்ஷும் தேர்வாகினர்.
- நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.
ஆக்லாந்து:
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.
சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 215 ரன்கள் குவித்தது.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து முதலில் ஆடியது. பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.
ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னும், 2வது இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தது.
- நியூசிலாந்து வெற்றி பெற 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹாமில்டன்:
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் அடித்தது.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பிட் 5 விக்கெட்டும், டேன் பேட்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியின் பெடிங்காம் 110 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற 227 ரன்கள் தேவைப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 9 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதால் இப்போட்டி பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.
- முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
- வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
மவுண்ட் மாங்கனு:
தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை
இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 4 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
கிறிஸ்ட்சர்ச்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் சவுத்தி, மேட் ஹென்ரி, பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவடில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக இப்திகார் அகமதுவும், தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் பின் ஆலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேஃபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிறகு, கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேஃபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்பேலாது ஆர்டெர்ன் ஒரு வெள்ளை நிற ஆடையும், கேஃபோர்ட் கருப்பு நிற உடையையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- டி20 வரலாற்றில் 150 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் சவுத்தி.
- அவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் உள்ளார்.
ஆக்லாந்து:
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் அதிரடியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுத்தி. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானிம் ரஷித் கான் 130 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி 127 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் லசித் மலிங்கா 107 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சஹல் 96 விக்கெட்டுடன் 14-வது இடத்தில் உள்ளார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 226 ரன்களைக் குவித்தது.
- டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். கேன் வில்லியம்சன் 57 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது.
- நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
- இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.
ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.
- பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
கடைசியாக 2022, நவம்பர் 20-ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணி கேப்டனாக இடம்பெற்றுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 12-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்தாண்டு ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் திரும்பி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.