என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.

    மவுண்ட் மனுவா:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.

    நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மனுடி நனயக்கரா 35 ரன்னும், சமாரி அத்தபத்து 23 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 20 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ப்ரீ ல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    • அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.
    • ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

    1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங்.

    இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு (32) நியூசிலாந்து நாட்டில் தற்போது 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்தில் 2023 இல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் 21 வயது இளைஞர் ஒருவர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பால்தேஜ் சிங்கின் பெயர் அடிபட்டது.

    இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பால்தேஜ் சிங் 700 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். மேலும் மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கிற்கு அவர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

     

    மெத்தபெட்டமைன் என்றால் என்ன? 

    இது "மெத்" அல்லது "படிக மெத்" என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) பாதித்து மூளையில் டோபமைனின் அளவை அதிகரித்து, ஒருவருக்கு உடனடி ஆற்றல், உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

    இது பழக்கமாக மாறி ஆபத்து விளைவிக்கக்கூடியது. இதன் பயன்பாடு, மனநல கோளாறுகள், இதயப் பிரச்சினைகள், தூக்கக் கலக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழிவகுக்கும்.    

    • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெல்லிங்டன்:

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சீயர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    ஹேமில்டன்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.

    மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    • நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகினார்.

    ஆக்லாந்து:

    நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, டென்மார்க்கின் கிளாரா டவ்சன் உடன் மோதினார். இதில் ஒசாகா 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் ஒசாகா காயம் காரணமாக திடீரென விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கிளாரா டவ்சன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • நியூசிலாந்தின் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வெல்லிங்டன்:

    இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அவிஷ்கா பெர்னண்டோ 56 ரன் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய சாப்மேன் நிதானமாக விளையாடினார். வில் யங் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 26.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்னும், சாப்மேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஆக்லாந்து:

    நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    நேற்று நடந்த அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அலிசியா பர்க்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் கிளாரா டவ்சன், அமெரிக்க வீராங்கனை ராபின் மோன்ட்கோமேரி உடன் மோதினார்.

    இதில் கிளாரா டவ்சன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.
    • இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது

    366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது.

    உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கின்றன.

    இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).

    பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றது. தொடர்ந்து கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.

    இந்நிலையில் அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்துள்ளது.

    இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது. நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் விருந்துகள் என அங்கு கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது. நியேசிலாந்து தலைநகர் சிட்னியிலும் புத்தாண்டு பிறந்து, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து டோக்கியோ, ஜப்பானிலும் புத்தாண்டு பிறந்தது. 

    • பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
    • அடுத்தாண்டு நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் நம்பிக்கை

    நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்பாராதவிதமாக 2024 மூன்றாம் காலாண்டில் 1% சரிவை கண்டுள்ளது.

    பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் கடன் நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவைத் தவிர்த்து, நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் 1991க்கு பிறகு மிகவும் மோசமான பெருமந்தத்தை தற்போது சந்தித்துள்ளது.

    அடுத்த காலாண்டில் நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சமீப காலமாக நியூசிலாந்து நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.

    இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இலங்கை 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 6-ம் இடத்திலும் உள்ளன.

    தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்தின் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஹாமில்டன்:

    இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் வில் யங் 42 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடி அரை சதமடித்த டாம் லாதம் 63 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 44 ரன்னிலும் அவுட் ஆனார்.

    ரச்சின் ரவீந்திரா 18 ரன், டேரில் மிட்செல் 14 ரன், டாம் பிளெண்டல் 21 ரன், கிளென் பிலிப்ஸ் 5 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் சாண்ட்னெர் நிலைத்து நின்று ஆடி அரை சதம் கடந்து 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×