என் மலர்
வணிகம் & தங்கம் விலை

350 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

- தேசிய குறியீடான நிஃப்டி 22,000 புள்ளிகளாக இருந்தது.
- இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (செவ்வாய் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 72,800 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 22,000 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் (காலை 9.17 மணி நிலவரம்) பி.எஸ்.இ. சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிவடைந்தது. நிஃப்டி 146 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. சர்வதேச நிர்வாக முதலீடு விற்பனை, அமெரிக்க வரி விதிப்பு மற்றும் ரஷியா-உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் நேற்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
நேற்றைய நிலவரப்படி சர்வதேச போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ.) ரூ. 4 ஆயிரத்து 781 கோடி மதிப்பிலான விற்பனையை பதிவு செய்தனர். உள்நாட்டு நிர்வாக முதலீட்டாளர்கள் ரூ. 8 ஆயிரத்து 790 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.