search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து தகராறில் 2 பேர் கைது
    X

    சொத்து தகராறில் 2 பேர் கைது

    • அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பக்கமுள்ளது கொத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 33). இவரது சகோதரர் பசவராஜ் (43). இவர்களுக்குள் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரி ராணியம்மாள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக பஸ்தலப்பள்ளிக்கு கடந்த 14-ந் தேதி சென்றனர். அப்போது அங்கு வந்த பசவராஜ் தரப்பினருக்கும், லட்சுமிதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் லட்சுமி, அவரது சகோதரி ராணியம்மாள், திம்மராயப்பா (39), திம்மராஜ் (42), முருகேஷ் (37), கீர்த்தனா (8) ஆகிய 6 பேரும் தாக்கப்பட்டனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பசவராஜ் (43), கதிர்வேல் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×