search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் உள்பட 2 பேர் மாயம்
    X

    தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் உள்பட 2 பேர் மாயம்

    • வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை
    • ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்நதவர் சாமிநாதன் (வயது65).

    இவர் கடந்த 14-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் சாமிநாதன் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின்பேரில் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று தளி பகுதியைச் சேர்ந்த சந்தீப் (வயது24). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப்-டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை சீனிவாசன் தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வாலிபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Next Story
    ×