search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அயனாவரத்தில் ரெயில்வே பெண் ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    சென்னை அயனாவரத்தில் ரெயில்வே பெண் ஊழியர் வீட்டில் நகை மற்றும் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் யாழினி தேவி (வயது 49). சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மகளும் சூர்யா என்ற மகனும் உள்ளனர்.

    நேற்றிரவு மீனம்பாக்கத்தில் உள்ள அக்கா ‌ஷர்மிளா தேவி வீட்டுக்கு யாழினிதேவி சென்றிருந்தார். அக்கா மகன் அரிபிரசாந்த் என்பவரது இறப்புக்கு பின்பு 16-ம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றி அயனாவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளியில் சென்றிருந்ததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    எனவே தெரிந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×