search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணிக்கம் தாகூர் எம்.பி. பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரசார்.
    X
    மாணிக்கம் தாகூர் எம்.பி. பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரசார்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. பிறந்த நாள்- சிவகிரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவினர் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு சிவகிரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், காங்கிரஸ் கொறடாவும், தெலுங்கானா மாநில பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் பிறந்த நாள் விழா சிவகிரி தேரடி முனீஸ்வரர் கோவில் அருகே நடைபெற்றது.

    விழாவிற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தங்கப்பாண்டியன், தொகுதி காங்கிரஸ் பட்டதாரி அணி தலைவர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தேரடி முனீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவரும், வழக்கறிஞருமான சங்கை. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்க்குடி அமர் சேவா சங்கம் கிளையான சிவகிரி ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு வெற்றியூர் கதிரவன், சிவகிரி நகர காங்கிரஸ் நிர்வாகிகள், துணைத்தலைவர்கள் நாட்டாமை மாணிக்கம், சதானந்தன், மணி, செயலாளர்கள் மாடசாமி, டெய்லர் ஆறுமுகம், நிர்வாகக்குழு தர்மராஜ், சந்திரன், பிச்சை, இளைஞர் காங்கிரஸ் மனோ பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகிரி நகர காங்கிரஸ் ஓ.பி.சி.தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.
    Next Story
    ×