என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கவர்னர் தமிழிசைக்கு ஆசி வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசைக்கு ஆசி வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி](https://img.maalaimalar.com/Articles/2022/Jun/202206031454056296_Tamil_News_tamil-news-Chief-Minister-Rangasamy-blessing-to-governor_SECVPF.gif)
X
கவர்னர் தமிழிசைக்கு ஆசி வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி
பிறந்தநாளில் கவர்னர் தமிழிசைக்கு ஆசி வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி
By
மாலை மலர்3 Jun 2022 2:54 PM IST (Updated: 3 Jun 2022 2:54 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசைக்கு நேற்று பிறந்த நாளாகும்.
பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி கடிதம் மூலம் கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமருக்கு கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
புதுவைக்கு வந்த கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் பிறந்த நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கவர்னர் மாளிகையில் கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது பேசிய கவர்னர் தமிழிசை, தனக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லை. இருப்பினும் கவர்னர் மாளிகை சார்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கவர்னரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதுவை கவர்னர் தமிழிசைக்கு நேற்று பிறந்த நாளாகும்.
பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி கடிதம் மூலம் கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமருக்கு கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
புதுவைக்கு வந்த கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் பிறந்த நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கவர்னர் மாளிகையில் கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது பேசிய கவர்னர் தமிழிசை, தனக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லை. இருப்பினும் கவர்னர் மாளிகை சார்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கவர்னரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
×
X