என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
தியாகதுருகத்தில் சூதாடிய 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புக்குளம் டாஸ்மாக் பின்புறம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (வயது 56), சேகர் (46) வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (41), காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (35), தியாகதுருகத்தைச் சேர்ந்த கமல்கான் (50) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
X