search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் நாளை வட்டார கல்வி அலுவலர் தேர்வை 974 பேர் எழுதுகிறார்கள்
    X

    தென்காசி மாவட்டத்தில் நாளை வட்டார கல்வி அலுவலர் தேர்வை 974 பேர் எழுதுகிறார்கள்

    • தென்காசியில் 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023-ம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்வுக்காக தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 974 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மேலும் தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    தேர்வில் முறைகேடு களில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×