search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பகண்டை கூட்டு ரோடு அருகே  இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி  4 பேர் படுகாயம்
    X

    பகண்டை கூட்டு ரோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி 4 பேர் படுகாயம்

    • கள்ளக்குறிச்சியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • குழந்தைராஜ், அவரது மனைவி மற்றும் மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில்விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியை சேர்ந்தவர் நிவேதிதன்(31) வேலை பார்த்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மையனூர் தீவாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிவேதிதன் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தைராஜ், அவரது மனைவி மற்றும் மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதில் நிவேதிதன் மேல்சிகிச்சை க்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நிவேதிதன் பரிதாபமாக இறந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் குழந்தைராஜ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×