search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்
    X

    108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்

    • 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
    • பிரசவம் பார்த்த ஊழியருக்கு குவியும் பாராட்டு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கு.வல்லம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சஙகீதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு வீட்டில் இருக்கும் பொழுதே பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் துடித்தார்.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அப்குதியில் இருந்த ஆண்டிமடம் ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அரியலூர் அருகே அல்லிநகரம் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்த போது பிரசவ வலி அதிகரித்து பிரசவிக்கும் நிலை உருவானது.

    உடனே ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார். இதில் சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பைலட் ராமானுஜம் உதவி புரிந்தார். பின்னர் தாயும், சேயும் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

    அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்களை உடன் வந்த உறவினர்கள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×