search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
    X

    கோவில் நிலங்களை அளவிடும் பணி தீவிரம்

    • 1484 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட உள்ளது
    • காரைப்பாக்கம் மாரியம்மன் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடும் செய்யும் பணிகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்வதற்காக நில அளவை குழுக்கள் அமைக்கப்பட்டு, நவீன நில அளவை கருவி கொண்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1484.58 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை, ஆலயநிலங்கள் வட்டாட்சியர் கலைவாணன், திருமானூர் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் ஆய்வு செய்து, நில அளவீடும் பணியை தொடங்கினர்.

    Next Story
    ×