search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கான சுற்றுலா
    X

    செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கான சுற்றுலா

    • செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளபட்டது
    • இந்த சுற்றுலா வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற 20 இளம் சிறார்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் மைய சிறப்பாசிரியர்களுடன் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார், கீழ்ப்பள்ளம் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் சுற்றுலா வாகனமானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சுற்றுலா வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×