என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
By
மாலை மலர்9 March 2023 10:04 AM IST

- பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் தொடர்பு
- மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித் (22). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து, அஜித் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X