search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

    • மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேங்கடதாம்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது28). இவர் அங்குள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட ரெங்கநாதன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    சிங்காரப்பேட்டை கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனவைி விமலா (26). இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு அதிக பணம் செலவு ஆகுவதால் குடும்ப நடந்த முடியாமல் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட விமலா சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×