என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு-அசாம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

- ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஈரோடு-அசாம் மாநிலம் ரங்கபாரா வடக்கு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
- அதிகாலை 2.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் 3.30 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலம்:
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஈரோடு-அசாம் மாநிலம் ரங்கபாரா வடக்கு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஈரோடு-ரங்கபாரா வடக்கு சிறப்பு ரெயில் (06073) வருகிற 24 மற்றும் 31-ந் தேதிகளில் (புதன்கிழமை) இயக்கப்படுகிறது.
அதிகாலை 2.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் 3.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 3.35 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கலே, தெனாலி, விஜயவாடா வழியாக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரங்கபாரா வடக்கை சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் ரங்கபாரா வடக்கு- ஈரோடு சிறப்பு ரெயில் (06074) 24 மற்றும் ஜூன் மாதம் 3-ந் தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படும். ரங்கபாரா வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திங்கட்கிழமை காலை 11.57 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ஈரோடு சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.