என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
திருநாவலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட கெடிலம் ஆற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் அசோக், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் உடையானந்தல் வந்தனர்.
அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப் பிடித்தனர். மாட்டு வண்டியின் உரிமையாளரான மணிகண்டன், பெருமாள் வெங்கடேசன், வீரமணி, ஆகிய 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். உடனே 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
X