search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சங்கராபுரம் அருகே  கெங்கை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
    X

    கெங்கை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    சங்கராபுரம் அருகே கெங்கை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

    • நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 22-ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஊரணி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல், அலகு போடுதல், காளிகோட்டை இடித்தல், தீ மிதித்தல், அம்மன் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நேற்று பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கெங்கை மாரியம்மன் எழுந்தருள தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3 மணிக்கு நடைபெற்றது. அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×