search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொட்டும் மழையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொட்டும் மழையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

    • மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
    • மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். பின்னர் மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×