என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
    X

     நுகர்வேர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மூன்றாம் காலாண்டு மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

    • மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வேர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மூன்றாம் காலாண்டு மாவட்ட கண்கா ணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்குழு கூட்டத்தில் தேசிய உணவுப் பாதுகா ப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு சட்டம் 2017-ன்படி பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தா லோசிக்கப்பட்டது.

    பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ராகி வழங்குவது குறித்து தெரிவிக்கும் போது ராகி கொள்முதல் செய்யும் பணிகள் மூன்று கொள்முதல் நிலையங்கள் (பென்னாகரம், தருமபுரி மற்றும் அரூர்) மூலம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நியாய விலைக்கடைகள் மூலம் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி குடும்ப அட்டைதரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரத்த சோகையை கட்டுபடுத்தும் என்பதால், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    விரைவில் தருமபுரி மாவட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    இக்குழுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம்.யசோதா, தருமபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் கே.எம்.அண்ணாமலை மற்றும் தருமபுரி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் சேகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×