search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளவாடியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
    X

    தாளவாடியில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    • தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன் குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் முட்டைக்கோசை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப்பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.2-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து தாளவாடி விவசாயிகள் கூறும்போது, வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில் வியாபாரிகள் எங்களிடமிருந்து முட்டைக்கோஸ் ரூ.2-க்கு கொள்முதல் செய்வதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழ்நாடு அரசு, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் முட்டைகோசை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×