என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி அருகே தி.மு.க. நிர்வாகி குடும்பத்திற்கு நிதி உதவி
- சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
- ஆறுமுகசாமி குடும்பத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி. இவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறி அவரது குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
அப்போது பேரூர் செயலாளர் பண்டாரம், இளைஞரணி நிர்வாகி செல்வகுமார், முன்னாள் பேரூர் செயலாளர் சங்கரபாண்டியன், முன்னாள் பேரூர் அவைதலைவர் செல்லப்பா, ஒன்றிய பிரதிநிதி கணபதி நாடார், வார்டு செயலாளர்கள் சங்கரன், தங்கராஜ், பாலகிருஷ்ணன், கணேசன், அய்யப்பன், முத்துபில்டர், துரைமணி, ராமமூர்த்தி, கவுன்சிலர் சங்கர் பூதத்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story