search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலம் உடைந்தது
    X

    காஞ்சிபுரம் அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலம் உடைந்தது

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
    • வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கச்சேரி மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாகரலை இணைக்கும் செய்யாற்றின் குறுக்கே உள்ளே தரைப்பாலம் உடைந்தது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தொடர்ந்து தரைப்பாலம் சேதம் அடைந்து வருவதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி வெங்கச்சேரி தரைப்பாலத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் அனைத்தும் உத்திரமேரூர் சென்று பெருநகர் வழியாக காஞ்சிபுரம் வரும் நிலை உள்ளது. சுமார் 20 கி.மீட்டர் சுற்றி வருகிறார்கள்.

    Next Story
    ×