search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதியதில் பள்ளி மாணவன் பலி
    X

    லாரி மோதியதில் பள்ளி மாணவன் பலி

    • லாரி மோதி பள்ளி மாணவன் பலியானான்
    • விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர் :

    சின்னதாராபுரம் அடுத்துள்ள சின்னப்புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகன் யுவேந்திரன் எலவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் யுவேந்திரன், பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சின்னதாராபுரம்-அரவக்குறிச்சி சாலையில் சின்னப்புளியம்பட்டி பிரிவு அருகே யுவேந்திரன் திரும்பும்போது, எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், யுவேந்திரன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×