என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கரூரில் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
By
மாலை மலர்7 Jun 2023 12:27 PM IST

- கரூரில் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யபட்டது
- போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கரூர்:
குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்சாயத்து கண்ணல் வடநாயக்கன்பட்டியில் கிராவல் மண் கடத்துவதாக, குளித்தலை டி.எஸ்.பி., ஸ்ரீதருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, தோகைமலை போலீசார் அங்கு சென்றனர். அப்போது டிப்பர் லாரியில், கிராவல் மண் கடத்தப்படுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து தப்பி ஓடிய பாலசமுத்திரடபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் குரு (35), விராலிமலை அடுத்த கோடாலிகுடியை சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் (39) ஆகிய இருவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X