என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் கற்றாழை வகை பூக்கள்
- கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது.
- தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பருவகால சூழலுக்கு ஏற்றவாறு பல வகைகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். இந்நிலையில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும் யூக்கா அலோய்போலியா என்ற கற்றாழை வகை பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன.
இந்த கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்த கற்றாழை மலர்கள் குளிர்ந்த வெப்பமும், தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை வாய்ந்தவை. இவ்வகை கற்றாழை செடிகளில் பூக்கும் பூக்கள் சுமார் 5 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டுள்ளது.
தற்போது கொடைக்கானலில் நிலவி வரும் குளிர்ந்த சூழலில் இந்த அரிய வகை (யூக்கா அலோய்போலியா) கற்றாழை பூக்கள் கொத்து கொத்தாக தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்திலும், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் நகர்ப்பகுதிகளிலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூத்து குலுங்குகின்றன. இவை பார்ப்பதற்கு தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும். பொதுவாக மண் அரிப்பை தடுக்கும் விதமாக இவ்வகை கற்றாழை செடிகள் மலைகளின் சரிவான பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்