என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
- விழாவில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
- சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இளைஞர்க ளுக்கான உறியடி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
Next Story