என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ByTNLGanesh27 Sept 2023 3:16 PM IST
- மாரிமுத்து மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- விபத்து தொடர்பாக அப்துல் ரகுமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தென்காசியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகி ச்சை க்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (21) என்பவர் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X