என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து லாரி உரிமையாளர் பலி
By
SLMVairakannan16 May 2023 12:54 PM IST

- பழனிச்சாமி (வயது 41). இவர் நேற்று திருச்சி ரோட்டில் நாகராஜபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.
- நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 41). இவர் நேற்று திருச்சி ரோட்டில் நாகராஜபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, லாரி உரிமையாளரான பழனிச்சாமி, குடிபோ தையில் இருந்ததாகவும், இதனால் நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படு கிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X