search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி மெக்கானிக் சாவு
    X

    லாரி மோதி மெக்கானிக் சாவு

    • அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்து சூர்யா மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    கிருஷ்ணகிரி,

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சூர்யா (வயது22).

    மெக்கானிக்கான இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில் நாயக்கனூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று வேகமாக வந்து சூர்யா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×